Tnpsc group 4 questions paper,tnpsc group 4,tnpsc group 4 general tamil,tnpsc group 4 complete study material,group 4exam online test,tnpsc vasyllabus
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப் 4 (Group 4 Tamil Study Material) தேர்வுகளில் கேட்கப்பட்ட தமிழ் வினாக்கள் மற்றும் விடைகள் அனைத்தும் தொகுத்து கீழே தரப்பட்டுள்ளது. தினமும் பழைய வினாத்தாள்களில் உள்ள தமிழ் வினாக்கள் மற்றும் விடைகளை படிப்பதன் மூலம் பொதுத்தமிழ் பகுதிகள் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
| TNPSC 2019 Group 4 - Tamil Question & Answer |
TNPSC 2019 Group 4 - Tamil Questions & Answer Part 1
1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
(A) அகநானூறு
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) பரிபாடல்
Answer : (C) நற்றிணை
2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது ?
(A) பரிபாடல்
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து
Answer : (A) பரிபாடல்
3. தவறான இணையைத் தேர்வு செய்க:
(A) குறிஞ்சி - கபிலர்
(B) முல்லை - ஓதலாந்தையார்
(C) மருதம் - ஓரம்போகியார்
(D) நெய்தல் - அம்மூவனார்
Answer : (B) முல்லை - ஓதலாந்தையார்
4. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க
(A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
(B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
(C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
(D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Answer : (B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
5.செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு
(A) உவமை
(B) அடுக்குத்தொடர்
(C) எண்ணும்மை
(D) உருவகம்
Answer : (D) உருவகம்
6) "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் நுண்டாகச் செய்வான் வினை"
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது ?
(A) படை கவசம்
(B) படை கருவிகள்
(C) கைப்பொருள்
(D) வலிமையான ஆயுதம்.
Answer : (C) கைப்பொருள்
7. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
(A) பொழிப்பு எதுகை
(B) கூழை எதுகை
(C) மேற்கதுவாய் எதுகை
(D) கீழ்க்கதுவாய் எதுகை
Answer : (B) கூழை எதுகை
8. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம். இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க
(A) கூழை எதுகை
(B) மேற்கதுவாய் எதுகை
(C) கீழ்க்கதுவாய் எதுகை
(D) பொழிப்பு எதுகை
Answer : (B) மேற்கதுவாய் எதுகை
9. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
(A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
(B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
(C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா ?
(D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
Answer : (B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
10. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
(A) உம்மைத்தொகை
(B) பெண்பால் பெயர்கள்
(C) எண்ணும்மை
(D) அன்மொழித்தொகை
Answer : (C) எண்ணும்மை
11. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
(A) மிகும்
(B) மிகாது
(C) சில இடங்களில் வரும்
(D) சில இடங்களில் வராது
Answer : (A) மிகும்
12. தாழ்பூந்துறை என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
(A) ஏவல் வினைமுற்று
(B) உரிச்சொல் தொடர்
(C) பண்புத்தொகை
(D) வினைத்தொகை
Answer : (D) வினைத்தொகை
13. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
(A) பழுத்த பழம்
(B) பழுக்கும் பழம்
(C) பழுக்கின்றது
(D) பழங்கள் பழுத்தன
Answer : (C) பழுக்கின்றது
14. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
(A) படித்து
(B) படித்தல்
(C) படித்த
(D) பாடுதல்
Answer : (A) படித்து
15. "கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
(A) கற்றல்
(B) கற்பனை
(C) கண்டான்
(D) கல்லை
Answer : (A) கற்றல்
16. "இயல்பானது" வேர்ச்சொல்லறிக
(A) இயல்
(B) இயல்பு
(C) இயைபு
(D) இய
Answer : (B) இயல்பு
17. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) தலைவன்
(C) அரண்
(B) நெருப்பு
(D) அம்பு
Answer : (D) அம்பு
18. குழலியும் பாடத் தெரியும் தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
(A) குழலிக்குப் பாடத்தெரியும்
(B) குழலியின் பாடத்தெரியும்
(C) குழலி பாடத்தெரியும்
(D) குழலியால் பாடத்தெரியும்
Answer : (A) குழலிக்குப் பாடத்தெரியும்
19. தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:
(A) அனுமதி
(B) ஈசன்
(C) குபேரன்
(D) மணிமுடி
Answer : (D) மணிமுடி
20. பொருந்தா இணையைச் சுட்டுக
(A) குறிஞ்சி - யாமம்
(B) முல்லை - மாலை
(C) மருதம் - நண்பகல்
(D) நெய்தல் - ஏற்பாடு
Answer : (C) மருதம் - நண்பகல்
COMMENTS