TNPSC GK,tnpsc group 4 tamil notes,Naladiyar notes,6th,7th book naladiyar,group 2 tamil Naladiyar,tnpsc exam,tnpsc online class,tnpsc tamil notes pdf
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் அலகு 7 ல் நாலடியார் என்ற பகுதிக்கு 6 ஆம் வகுப்பு பழைய பள்ளிப்பாடப் புத்தக்கத்தில் உள்ள நாலடியார் பகுதி, 7 ஆம் வகுப்பு புதிய பள்ளிப் பாடப் புத்தகத்தில் உள்ள நாலடியார் பகுதி, பள்ளிப்புத்தக வினாக்கள் மற்றும் அதற்கான விடைகள், மேற்கோள்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் தொகுத்து ஒரே PDF ஆக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
Group 4, Group 2 - Tamil Naladiyar Notes PDF |
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 பொது தமிழ் புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நோட்ஸ் மற்றும் புத்தக வினாக்கள் மற்றும் விடைகள், கூடுதல் தகவல்கள், பழைய வினாக்கள் மற்றும் விடைகள் தொகுத்து தங்களுக்கு இந்த இணையதளத்தில் வழங்கப்படும்.
In the TNPSC Exam Group 2 and Group 4 General Tamil new syllabus, Unit 7 includes an important section on Naladiyar. This PDF study material has been specially prepared for TNPSC aspirants and includes the Naladiyar portion from the 6th standard old Tamil textbook as well as the 7th standard new school textbook. It also features school textbook book back questions and answers, TNPSC Exam Group 2 and Group 4 model questions, TNPSC Tamil Previous Year Questions and important literary references from Naladiyar.
This content is highly useful for those preparing for TNPSC Exam General Tamil (New Syllabus), especially literary topics. The PDF includes a complete comparison of old and new syllabus Naladiyar portions, helping candidates get a deep understanding of the text. With additional reference notes, quotes, and explanations, this is a valuable free TNPSC Tamil study material PDF for anyone focusing on Group 2 and Group 4 exams. Download this Naladiyar PDF for TNPSC preparation and boost your chances of success in the exam.
6 ஆம் வகுப்பு பழைய புத்தகம்
பாடல்பொருள்
நாயின் கால்விரல்கள் நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நட்பால் நமக்கு என்ன பயன்?
வாய்க்கால், தொலைவிலுள்ள நீரைக் கொண்டுவரும்; அந்நீரை வயலுக்குப் பாய்ச்சி விளைய உதவும். வாய்க்காலைப்போல உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்கள் நட்பை நாம் தேடிக்கொள்ளுதல் வேண்டும்.
சொற்பொருள்
1) நாய்க்கால் - நாயின் கால்
2) ஈக்கால் - ஈயின் கால்
3) நன்கணியர் - நன்கு + அணியர்
4) அணியர் நெருங்கி இருப்பவர்
5) என்னாம் - என்ன பயன்?
6) சேய்(மை) - தொலைவு
7) செய் - வயல்
8) அனையார் - போன்றோர்
நூல்குறிப்பு
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
- நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
- அறக்கருத்துகளைக் கூறுவது.
- 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
- இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு, பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள். இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
புத்தக வினாக்கள் மற்றும் விடைகள்
பொருள் எழுதுக.
1. அணியர் - போன்றோர்
2. செய் - வயல்
பிரித்து எழுதுக.
1. நாய்க்கால் - நாய் + கால்
2. நன்கணியர் - நன்கு + அணியர்
3. நட்பென்னாம் - நட்பு + என்னம்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. பதினெண் என்பதற்கு பதினெண் என்பது பொருள்.
7 ஆம் வகுப்பு புதிய புத்தகம்
அழியாச் செல்வம்
சொல்லும் பொருளும்
1) வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்2) கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
3) வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
4) விச்சை - கல்வி
பாடலின் பொருள்
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆகலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
நூல் வெளி
- நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
- இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
- திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக்கொண்டது.
- இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் கம் குழந்தைகளுக்குச் சேந்த்து வைக்க வேண்டிய செல்வம் _____ . அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
விடை : ஆ) கல்வி
2. கல்வியைப் போல் __ செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ)தவறில்லாத
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ)தவறில்லாத
விடை : ஆ) கேடில்லாத
3. 'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுகக் கிடைப்பது _____
அ) வாய்த்து + ஈயின் ஆ) வாய் + தீயின் இ) வாய்த்து + தீயின் ஈ) வாய் + ஈயின்
விடை : ஆ) வாய் + தீயின்
4. "கேடில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) கேடி + இல்லை ஆ) கே இல்லை
இ) கேள்வி இல்லை ஈ) கேடு + இல்லை
விடை : ஈ) கேடு + இல்லை
4. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____
அ) எவன்ஒருவன் ஆ) எவன்னொருவன் இ) எவனொருவன் ஈ)ஏன்னொருவன்
விடை : இ) எவனொருவன்
நாலடியார் - 8 ஆம் வகுப்பு பாடல்
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து
நாலடியார் - கூடுதல் தகவல்கள்
நூல் பகுப்பு
- நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் - பதுமனார்.
- முப்பாலாகப் பகுத்தவர் - தருமர்.
- இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
- முத்தரையரைப் பற்றி கூறும்
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையதுஅறத்துப்பால் - 13 அதிகாரங்கள்பொருட்பால் - 24 அதிகாரங்கள்இன்பத்துப்பால் - 3 அதிகாரங்கள்அறத்துப்பால் - துறவறவியல் இல்லறவியல்பொருட்பால் - நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறிஇயல்இன்பத்துப்பால் - இன்ப துன்பவியல், இன்பவியல்
- நாலடியார் - 3 பால், 12 இயல்கள், 40 அதிகாரங்கள்
வேறு பெயர்கள்
- நாலடி
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
- திருக்குறளின் விளக்கம்
- குட்டி திருக்குறள்
மேற்கோள்கள்
1) கல்வி கரையில; கற்பவர் நாள்சில
2) ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
3) பால்உண் குருகின் தெரிந்து
4) கல்வி அழகே அழகு
5) கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின் ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து. – சமணமுனிவர்
6) கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. – நாலடியார்
7) மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். – நாலடியார்
நாலடியார் - Previous Year Old Questions PDF
COMMENTS