6th tamil Chapter 1.1 இன்பத்தமிழ் book back answers,6th tamil iyal 1 book back answers,6th new book tamil answers,group 4 tamil important questions
6th Tamil Chapter 1.1 இன்பத்தமிழ் - Online Test |
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற ____________ அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Answer : அ) சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு --------- ஆக இருக்கும்.
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
Answer : ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Answer : ஆ) நிலவென்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
Answer : ஆ) தமிழெங்கள்
5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Answer : ஆ) அமுது + என்று
6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Answer : அ) செம்மை + பயிர்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
அ) விளைவுக்கு - பால்
ஆ) அறிவுக்கு - வேல்
இ) இளமைக்கு - நீர்
ஈ) புலவர்க்கு - தோள்
Answer :
அ) விளைவுக்கு - நீர்
ஆ) அறிவுக்கு - தோள்
இ) இளமைக்கு - பால்
ஈ) புலவர்க்கு - வேல்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர் - நேர்
விடை :
- பேர் – நேர்
- அமுதென்று – நிலவென்று
- பேர் – நீர்
- உயிருக்கு – விளைவுக்கு
- பேர் – ஊர்
- இளமைக்கு – புலவர்க்கு
- பால் – வேல்
- தமிழுக்கு – வாழ்வுக்கு
- வான் – தேன்
- உயர்வுக்கு – அசதிக்கு
- தோள்- வாள்
- அறிவுக்கு – கவிதைக்கு
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை ?
Answer : அமுதம், நிலவு, மணம்.
2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள் ?
Answer : தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.
சிறுவினா
1. இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
Answer : தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது ?
Answer : (விளைவு – விளைச்சல்)
- நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
- நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
- நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.
நூல் வெளி : பாரதிதாசன்
- இயற்பெயர் : சுப்புரத்தினம்
- பிறந்த ஊர் : புதுச்சேரி
- பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
- பணி : தமிழாசிரியர்
- சிறப்புப்பெயர் : பாவேந்தர், புரட்சிக் கவிஞர்
- காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
- பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- தம் கவிைதகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.
- இயற்றிய நூல்கள்
- குடும்ப விளக்கு
- பாண்டியன் பரிசு
- பிசிராந்தையார்
- அழகின் சிரிப்பு
பாடலின் பொருள்
- நிருமித்த - உருவாக்கிய
- விளைவு - விளைச்சல்
- சமூகம் - மக்கள் குழு
- அசதி - சோர்வு
- வான் – வானம்
- இணை – சமம்
- சுடர் – ஒளி
எதிர்சொல் தருக
- இளமை × முதுமை
- புகழ் × இகழ்
- அசதி × சுறுசுறுப்பு
- ஒளி × இருள்
- இன்பம் × துன்பம்
- அமுதம் × விடம்
பாடல் & ஆசிரியர்
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
– கவிஞர் காசி ஆனந்தன்
COMMENTS